உயிருள்ளதும், ஆற்றல் மிக்கதுமான (எபி 4:12) கடவுளின் வார்த்தை, நம்பிக்கை
கொண்டோர் அனைவருக்கும் நிறைவாழ்வளிக்கும் கடவுளின் உடனிருப்பின் உன்னதச்
சின்னம். காலங்கடந்த கடவுளை நம் கண்முன் நிறுத்தும் ஞானப் பெட்டகம். வாசிப்போர்
அனைவருக்கும் வாழ்வினை வாக்களிக்கும் வல்லமையுள்ள அடையாளம். தொடக்கமுதல்
இருந்த வாழ்வுதரும் வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார் (யோவா 1:14)
என்ற மறைபொருளை ஏற்று அறிக்கையிடும் மீட்படைந்தோரின் திருக்கூட்டமாகிய
திருஅவை, திருவிவிலியத்தை வாசித்து, வாழ்வாக்குவதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு
இடையறாது கற்பித்து வருகின்றது.
இறையாசீருடன்
மேதகு ஆயர் அ. ஸ்டீபன்
தூத்துக்குடி மறைமாவட்டம்.